/tamil-ie/media/media_files/uploads/2023/01/chennai-metro.jpg)
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) சர்தார் படேல் சாலை உட்பட ஏழு சாலைகளை 20 மீட்டரிலிருந்து 30.5 மீட்டராக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான காரணம், சென்னையில் கட்டுமானப்பணியில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களின் இணைப்பை மேம்படுத்துவது தான் என்று தெரிவித்துள்ளனர்.
எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டேங்க் பண்ட் சாலை, கிரீம்ஸ் சாலை, புதிய ஆவடி சாலை மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய பகுதிகளிலும் சாலை விரிவாக்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சாலைகளை குறைந்தபட்சம் 18 மீட்டருக்கு விரிவுபடுத்துவதற்கு சி.எம்.டி.ஏ. நிலம் கையகப்படுத்தும் என்று கூறியுள்ளது. "எல்.பி. ரோடு, பேப்பர் மில்ஸ் ரோடு, ஹண்டர்ஸ் ரோடு உள்ளிட்ட மீதமுள்ள பகுதிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்" என்று சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்ஷுல் மிஸ்ரா தெரிவித்தார்.
ஆலோசகர், தற்போதுள்ள சீரமைப்பில் சாத்தியமான மேம்பாடுகள், இடமாற்றம் செய்யப்பட வேண்டிய பயன்பாடுகள், வெட்டப்பட வேண்டிய மரங்கள் மற்றும் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் மதிப்பீட்டை நடத்தி இழப்பீடு நிர்ணயம் செய்வார்.
விரிவான ஆய்வு, பூர்வாங்க கணக்கெடுப்பு மற்றும் சீரமைப்புத் திட்டம் ஆகியவற்றை மேற்கொள்ள ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலத் திட்ட அட்டவணை வந்தவுடன், ஆலோசகர் விரிவாக்கத் திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று கட்டிட உரிமையாளர்களுக்கு நடைமுறைகளை விளக்குவார். ஆலோசகர் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
பல நகர்ப்புற திட்டமிடுபவர்கள், சாலை விரிவாக்கம் குறுகிய கால முடிவுகளை மட்டுமே வழங்கும் என்றும், பொதுப் போக்குவரத்து மற்றும் மோட்டார் அல்லாத போக்குவரத்தைப் பயன்படுத்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
வெளிவட்டச் சாலையுடன் கிராமங்களை இணைக்கும் வகையில் சாலைகளின் கட்டத்தையும் CMDA முன்மொழிந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.