Advertisment

மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பா.ஜ.க நிர்வாகி அதிரடி கைது

பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
BJP MS sha

பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக இருப்பவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் தனியார் கல்லூரியில் தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். 

Advertisment

அதில், எம்.எஸ்.ஷா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் கூறப்பட்டுள்ளது. மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், என்னுடைய மகளின் செல்போனுக்கு  பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா ஆபாசமான உரையாடல்களை அனுப்பி வைத்துள்ளார்.  

இது குறித்து கேட்ட போது, எம்.எஸ்.ஷா என் மனைவி உடன் முறையற்ற தொடர்பில் இருந்ததும், கடனை அடைப்பதாக தனியார் சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று மனைவியோடு தகாத உறவில் இருந்ததும் தெரிந்தது. அதோடு என் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு முழுமையாக எனது மனைவியும் உடைந்தையாக இருந்திருக்கிறார்' எனப்  புகாரில் கூறியுள்ளார். 

புகாரின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இதையடுத்து  நீதிமன்ற உத்தரவுப்படி எம்.எஸ்.ஷா மற்றும் சிறுமியின் தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எம்.எஸ்.ஷாவை போலீசார் கைது செய்தனர். 
 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment