/indian-express-tamil/media/media_files/f7LMHLq3atEZO5vdRhZj.jpg)
புதுக்கோட்டையில் திருச்சி ரவுடி துரை போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ரவுடியை பிடிக்க சென்ற போது போலீஸாருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி துரை மீது ஏற்கனவே 70 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
திருச்சி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை, வம்பன் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இன்று அவரை பிடிக்க சென்றுள்ளனர். ரவுடி துரையை போலீசார் பிடிக்க முயன்ற போது, போலீசாரை ரவுடி துரை தாக்கியதாகவும், பாதுகாப்புக்காக போலீசார் அவரை நோக்கி துப்பாக்கிகள் சுட்டதாகவும் முதல் கட்டத்தை தகவல் வெளியாகி உள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி துரை மீது நான்கு கொலை வழக்குகள் உட்பட 70 வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் வெளியில் இருக்கும் நிலையில் ஒரு சில குற்றவாளிகள் கணக்குக்காக என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுவது வேதனைக்குரிய விஷயமாக இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.