ஆசிரியர் பற்றாக்குறை: தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ கவுன்சில் நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NMC 2

ஆசிரியர் பற்றாக்குறை: 34 மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப்பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல், சேவை, ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மற்றும் தோல் மருத்துவம் உள்ளிட்ட 95% துறைகளில் நிலவும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. உதாரணமாக, அரசு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் முதல் கதிரியக்கவியல் வரை உள்ள 20 துறைகளில் 19 துறைகளில் AEBAS பதிவுத் தரவுகளின்படி ஆசிரியர்கள்/மருத்துவர்கள்/உதவியாளர்கள் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 20 துறைகளில் 8 துறைகள் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன. இந்த 2 கல்லூரிகளிலும் நோயியல் அறிக்கைகளில் போதுமான தரவுகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், முதல் கல்லூரி தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தரவுகளின்படி எந்த "அவசர அறுவை சிகிச்சையும்" மேற்கொள்ளவில்லை.

மே 7-ம் தேதியிட்ட இந்த நோட்டீஸ்களில், இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் இயக்குநர் சுகலால் மீனா, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியின் முதல்வரிடமிருந்தும் ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தைக் கோரியுள்ளார். தவறினால் கல்லூரிக்கு அளிக்க எந்த விளக்கமும் இல்லை என்று கருதப்படும். மேலும் எந்த வாய்ப்பும் வழங்கப்படாது. இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் தகுந்த முடிவு எடுக்கும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வித் தரத்தை பராமரிப்பதற்கான ஒழுங்குமுறை விதிகள், 2023-ன் மூன்றாம் அத்தியாயம், பிரிவு 8 மருத்துவ நிறுவனங்களுக்கு ₹1 கோடி வரை அபராதம் விதிக்க அதிகாரம் அளிக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

செப்.19, 2023 அன்று அறிவிக்கப்பட்ட ஒழுங்குமுறைகளின்படி, நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்ட முறையில் ஆண்டு அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். நவ.1, 2024 மற்றும் ஏப்.25 ஆகிய தேதிகளில், எம்.பி.பி.எஸ். மாணவர்களைச் சேர்க்கை அனுமதிக்கப்பட்ட அனைத்து கல்லூரிகளும் மொத்த ஆசிரியர்கள், உள் மற்றும் வெளிநோயாளிகள் விவரங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை உட்பட ஆண்டு அறிவிப்புக்கான விவரங்கள்/தரவுகளை என்.எம்.சி இணையதளத்தில் நிரப்ப அறிவுறுத்தப்பட்டன. நிபுணர்களால் நியமிக்கப்பட்டவர்களின் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த விளக்கம் கேட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சங்குமணி கூறுகையில், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.  "பெரும்பாலானவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் பணியில் சேருவார்கள். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பிவிட்டோம் என்று தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப நம்புகிறோம்" என்று மருத்துவக் கல்வி இயக்குநர் தெரிவித்தார்.

மருத்துவர் சங்கங்கள் கூறுகையில், சரியான நேரத்தில் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவது சாத்தியமற்றது. 2024-ல், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களில் குறைந்தது 30% காலியிடங்கள் இருந்ததாகக் கூறியது. திங்களன்று, அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் சங்கம் 2023-ம் ஆண்டு தொகுதிக்கான கலந்தாய்வு இப்போதுதான் முடிவடைந்துள்ளது என்று கூறியது. "இன்னும் 2 ஆண்டுகளுக்கு கலந்தாய்வு உள்ளது. கலந்தாய்வு முடியும் வரை காலிப் பணியிடங்கள் இருக்கும். மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தேவைக்கேற்ப அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தவறிவிட்டது" என்று மாநில அமைப்பாளர் டாக்டர் ஏ. ராமலிங்கம் கூறினார்.

Chennai Delhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: