தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சிம் கார்டுகள் ஆயிரத்து 930 விற்பனை முனைய முகவர்களால் விற்கப்பட்டது தெரியவந்தது. தொலைத்தொடர்புத் துறையுடன் நடத்திய சரிபார்ப்புக்குப் பின், தேசிய குற்றப்பதிவு இணையதளத்தில் (என்.சி.ஆர்.பி) 84 விற்பனை முகவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இவர்களில் 39 பேர் தற்போது செயல்பட்டு வருகின்றனர். மேலும், சிலர் சைபர் குற்றங்களில் ஈடுபட்டதற்காகவோ அல்லது தொடர்புகளுக்காகவோ கைது செய்யப்பட்டுள்ளனர். "தேசிய குற்றப் பதிவு இணையதளத்தில் ஒரு தொலைபேசி எண் குறித்து புகாரளிக்கப்படும் போதெல்லாம், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் பயனர்களை மீண்டும் இ-கேஒய்சி செய்ய கேட்க வேண்டும். இருப்பினும், தொலைத்தொடர்புத் துறையின் தரவுகள் பெரும்பாலான சிம் கார்டுகள் மறு சரிபார்ப்பில் தோல்வியடைந்தன என்பதைக் காட்டுகின்றன" என்று சி.பி.ஐ. அறிக்கை கூறியது.
இந்த சிம் கார்டுகளை அங்கீகரிப்பதில் தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அந்த அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது. மேலும், தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளது.
நன்றி: timesofindia.indiatimes.com