அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சிங்கப்பூர் தூதர் சந்தித்து பேசினார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் தென் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் எட்கர் பாங் மற்றும் துணைத் தூதர் பேசில் டிங் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இதையும் படியுங்கள்: மின் இணைப்புடன் ஆதார் இணைப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு; வியாழக்கிழமை விசாரணை
இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக இ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடன் இருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil