தமிழகத்தில் வணிக ரீதியாக முதலீடு ஈட்ட தொழில் நிறுவனங்களுடன் சிங்கப்பூரில் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றிருக்கிறார்.
Advertisment
தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செலுத்த ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவெடுத்துள்ளனர்.
Had discussion and productive engagement with the heads of major financial and industrial institutions from Singapore. The talks with Dilhan Pillay Sandrasegara, Executive Director and CEO of Temasek, Kim Yin Wong of Sembcorp and Sanjeev Dasgupta of CapitaLand reaffirmed the… pic.twitter.com/ShjIeBwCGc
இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி (நேற்று) முதல் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார்.
Advertisment
Advertisements
சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் ஆகியோர் வரவேற்றனர்.
,
சிங்கப்பூர் நாட்டின் டமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம்… pic.twitter.com/ucKeGjAZP6
செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங்க் மற்றும் கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோரைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil