/indian-express-tamil/media/media_files/2024/11/18/DIEPBiQkYrD2S00tvbe4.jpg)
சரிகமப நிகழ்ச்சி பிரபல பாடகர் குருகுகன் மீது சென்னையில் மென்பொருள் பொறியாளராக இருக்கும் பெண் புகார் அளித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக இளம் பெண் அளித்த புகாரின் பேரில் சரிகமப நிகழ்ச்சி பிரபல பாடகர் குருகுகனை பரங்கிமலை போலீஸார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரிகமப நிகழ்ச்சி பிரபல பாடகர் குருகுகன் மீது சென்னையில் மென்பொருள் பொறியாளராக இருக்கும் பெண் புகார் அளித்துள்ளார்.
பிரபல தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடகர்களுக்கான இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர் குருகுகனும் சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, அந்த பெண் கர்ப்பம் அடைந்ததாகவும், இதை குருகுகனிடம் கூறியபோது, கருவைக்லைத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக அந்த பெண் புகாரி தெரிவித்துள்ளார்.
அந்த பெண் சம்மதிக்கவில்லை என்றும், ஆனாலும், குருகுகன் கட்டாயக் கருக்கலைப் செய்ய வைத்ததாகவும், கருவைக் கலைத்த பிறகும், குருகுகன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாகவும், இதனால் தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த பெண் பரங்கிமலை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், பாடகர் குருகுகன் மீது பொய்யான உத்தரவாதம், மிரட்டி ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பாடகர் குருகுகனை பரங்கிமலை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.