சிவகங்கை மக்களவை தொகுதியில், இந்திய மக்கள் கல்வி கழக நிறுவனர் தேவநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார், அப்போது அவர் வைரம் பதித்த பேனாவை தொலைத்துவிட்டார்.
வருகின்ற 19ம் ஏப்ரல், மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க கூட்டணியில் சிவகங்கை தொகுதி இந்திய கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில், தேவநாதன் பங்கேற்றார். அப்போது அவரது வைரம் பதித்த பேனா தொலைந்துவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மைக்கில் அறிவிக்கப்பட்டது. அவரது வைரம் பதித்த பேனாவை தேடுமாறு தெரிவிக்கப்பட்டது.