/indian-express-tamil/media/media_files/2025/09/15/sivagangai-2025-09-15-16-20-33.jpeg)
Sivagangai
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவகோட்டை அருகே உள்ள புதூர் தெற்கு தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமநாதன், தனது மனைவி இறந்த பிறகு, சொத்துகளைத் தன் குழந்தைகளின் பெயருக்கு மாற்றியுள்ளார். அதன் பிறகு, குழந்தைகள் தன்னை சரியாகக் கவனித்துக்கொள்வதில்லை என்று கூறி, இது தொடர்பாக பல்வேறு அரசு அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்திருந்தார்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்த அவர், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தீக்குளிக்க முயற்சித்தார்.
அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவரைத் தடுத்து காப்பாற்றினர். பின்னர் அவரை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றதோடு, சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.