/indian-express-tamil/media/media_files/h9NYFZOOuSAJekUgS7wX.jpg)
தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி அகிலன் காயம், ரவுடி வெட்டியதில் எஸ்.ஐ. குகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுள்ளான் அகிலன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இந்த நிலையில், சுள்ளான் அகிலன் இன்று காலை காளையார் கோவில் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அப்பகுதியில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் வந்த வாகனத்தை மறைத்து சோதனையிட்டுள்ளனர். அந்த வாகனத்தில் சுள்ளான் அகிலன் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது சுள்ளான் அகிலன் வாகனத்தில் இருந்த ஆயுதங்களால் காளையார் கோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் குகனை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஆடிவேல் சுள்ளான் அகிலனை சுட்டு பிடித்துள்ளார். சுள்ளான் அகிலன் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு இன்று காலை சுமார் 9:30 மணி அளவில் அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் குற்றவாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.