13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 20 ஆண்டு சிறை: சிவகங்கை போக்சோ கோர்ட் அதிரடி உத்தரவு

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
 Sivaganga Pocso Court order 20 years imprisonment in 13 year old girl sexual harassment case Tamil News

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்துள்ள உதயாச்சி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (29). ஏ.சி மெக்கானிக்கான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

Advertisment

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக  தேவகோட்டை அனைத்து மகளீர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

இந்த நிலையில், இந்த வழக்கின் இன்று தீர்ப்பை நீதிபதி கோகுல் முருகன் வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கியும் மற்றும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தும் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment
Advertisements

 

Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: