/indian-express-tamil/media/media_files/lFOeCl5jlIjkinHr6UXU.jpg)
சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டு
Sivagangai:சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ஆண்டுதோறும் தை மாதம் 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. புகழ் பெற்ற இந்த மஞ்சுவிரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், மாடுபுடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் வலயபட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரழந்தார். காளை முட்டியதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பாஸ்கரன் என்ற சிறுவன் உயிரிழந்தார்.
இதேபோல், மஞ்சுவிரட்டு போட்டியில் 35 வயதான இளைஞர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். இதனால், சிராவயல் மஞ்சுவிரட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 75 பேர் காயமடைந்துள்ளனர்
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.