/indian-express-tamil/media/media_files/2025/08/27/sivaganga-youth-mysterious-death-relatives-block-road-traffic-affected-tamil-news-2025-08-27-15-55-28.jpg)
சிவகங்கை, அண்ணாமலை நகரைச் சேர்ந்த இளைஞர் மர்ம மரணமடைந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது.
சிவகங்கை, அண்ணாமலை நகரைச் சேர்ந்த இளைஞர் மர்ம மரணமடைந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது.
சிவகங்கை, அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் பரத். இவர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ராஜேஷ் கண்ணன் நேற்று இரவு 12 மணி அளவில் இளையான்குடி சாலை அருகே சென்றுள்ளார். அப்போது அண்ணாமலை நகர் என்ற இடத்தில் பரத் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இறந்த பரத்தின் உடலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. '
இந்நிலையில், பரத்தின் உறவினர்கள் இறப்பில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிவகங்கை மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுனர். இதனையடுத்து, சம்பவ இடம் வந்த உயர் காவல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் விசாரணை மேற்கொண்டு ஒரு வாரத்தில் குற்றவாளியை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பரத்தின் உடலை பெற்று சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.