சிவகங்கை மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் ரூ.25 லட்சம் மோசடி: கணக்கர் தலைமறைவு

சிவகங்கை மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணக்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணக்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
bisho

சிவகங்கை மறை மாவட்ட ஆயர் இல்லம் மேலூர் சாலை பிரிட்டோ நகரில் அமைந்துள்ளது. இங்கு 2019-ஆம் ஆண்டு முதல் ஆயர் இல்ல கணக்கர் பணியை மானாமதுரை பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் செய்து வந்துள்ளார்.

Advertisment

கணக்கர் பிரவீனின் நடவடிக்கைகளில் சில சந்தேகங்கள் ஏற்பட ஆயர் இல்ல பொருளாளர் ஆரோக்கியசாமி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள ஆயர் இல்ல வங்கிக் கணக்கை சரிபார்த்த போது கணக்கர் பிரவீன் ஆயர் இல்லத்தில் போலியான பணிகளை பதிவு செய்து வந்தது தெரியவந்தது.

பிரவீன் தனக்கு தெரிந்த மானாமதுரை பகுதியை சேர்ந்த ஐந்து நபர்களுக்கு 25 லட்ச ரூபாயை ஐந்து வங்கிக்  காசோலைகளாக வெவ்வேறு தேதிகளில் கொடுத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து மறை மாவட்ட ஆயர்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரவீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து பிரவீன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisment
Advertisements

ஆயர் இல்லத்தில் பணி செய்த ஊழியர் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம்  கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: