சிவகங்கையில் பள்ளிக்கூடம் வாசலில் காரில் கடத்தப்பட்ட மாணவி; காரிலிருந்து குதித்து தப்பி ஓட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவியை காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி, காரில் இருந்து குதித்து தப்பினார்.

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவியை காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி, காரில் இருந்து குதித்து தப்பினார்.

author-image
WebDesk
New Update
Sivagangai girl abduct

அவர்களோடு சண்டையிட்டு காரில் இருந்து குதித்து தப்பியது. காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். திங்கள்கிழமை (11.08.2025) காலை பள்ளிக்கு வந்த மாணவி பள்ளி வாசலில் அவரது சகோதரர் இருசக்கர வாகனத்தில் வந்து இறக்கிவிட்டு சென்றார். அப்போது எதிரில் உள்ள கடைக்கு மாணவி சென்றபோது காரில் வந்த ஆறு பேர் 17 வயது மாணவியை தூக்கி காரில் கடத்திச் சென்றனர்.

Advertisment

மானாமதுரையில் இருந்து அந்த பெண்ணை காரில் கடத்தி வந்த கும்பல் சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் வரும் பொழுது அவர்களோடு சண்டையிட்டு காரில் இருந்து குதித்து தப்பியது. காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

காரில் இருந்த 6 பேரும் முகத்தைக் கர்சீப் ஆல் மறைத்திருந்தனர் அடையாளம் தெரியாத 6 பேர் சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து தப்பிச் சென்றனர் . பள்ளிக்குச் சென்ற மாணவியை காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: