Advertisment

கீழடியில் 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறை; மகிளா கோர்ட் தீர்ப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
convicts

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை விரைவு மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. 

Advertisment

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் 41. இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 2000-ம் ஆண்டு செப்.29 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் பாலமுருகனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றவாளி பாலமுருகனுக்கு 7  ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

செய்தி: சக்திசரவணக்குமார்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivagangai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment