/indian-express-tamil/media/media_files/2024/10/23/1ZmGJfugS54otzm7YxgM.jpg)
சிங்கம்புணரியில் பிறந்த சில மணி நேரத்தில் ஆண் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கொடூர தாய் மற்றும் கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நேற்று இரவு சுக்காம்பட்டி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் குழந்தை கத்தும் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்த பொழுது பிறந்து சில மணி நேரங்களை ஆன ஆண் குழந்தை கழுத்து, கைகளில் அறுபட்டு கிடந்தது.
குழந்தையை மீட்ட மரியம் பீவி சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக திருப்பத்தூர் டி.எஸ்.பி செல்வகுமார் சிங்கம்புணரி ஆய்வாளர் கவிதா உதவி ஆய்வாளர் லெனின் ஆகியோர் தீவிர விசாரணை செய்து அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா (வயது 18) என்பவரைக் கண்டுபிடித்தனர். அவரை பிடித்து விசாரணை செய்த பொழுது, அவர் வீட்டு அருகே வசிக்கும் திருமணமான கொத்தனார் மகேந்திரன் (வயது 42) தன்னை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் தான் கர்ப்பமுற்றதாகவும் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிதான் பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து வீசி சென்றதாகவும் காவல்துறையினர் விசாரணையில் கூறியதாக தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கொத்தனார் மகேந்திரனை பிடித்த காவல்துறையினர் 10 மாதத்துக்கு முன்பு 17 வயது சிறுமியான அபிநயாவை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் பெற்ற குழந்தையை கொலை செய்ய முயன்றதாக அபிநயாவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.