New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/20/h0kWg6yB1cnOmtodmjIK.jpeg)
சிவகங்கை அருகே கல்குவாரி நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு; 4 பேரின் உடல் மீட்கபட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் அறிவிப்பு; சம்பவ இடத்திற்கு விரையும் தேசிய பேரிடர் மீட்பு படை
சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை அருகே மல்லாக்கோட்டை பகுதியில் இயங்கி வந்த கல்குவாரியில் தொடர்ந்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலச்சரிவில் சிக்கிய 6 பேரில் 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது வரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பாறை இடுக்குகளில் சிக்கிய மற்றொரு தொழிலாளரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் பலத்த காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்களில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜித் மற்றும் ஓடைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், கணேஷ், ஆறுமுகம் மற்றும் ஆண்டிச்சாமி அடங்குவர். சம்பவ இடத்துக்கு உறவினர்களை அனுமதிக்காததால், போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோரும் உடன் இருந்தனர். மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பெயரில் சிவகங்கைக்கு தேசிய மீட்பு படை விரைகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.