/indian-express-tamil/media/media_files/2024/12/29/Tu7NC0JpU5nWdB5qQ6Ac.jpg)
அழுகிய கணவரின் சடலத்தோடு வாழ்ந்த மனைவி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் முஸ்லிம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆதிரத்தினமூர்த்தி, இவர் தனது மனைவி பரிமளா உடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் பரிமளா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக ஆதிரத்தினமூர்த்தியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பத்தினர் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது ஆதிரத்தினமூர்த்தி கட்டிலில் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததுள்ளார். மேலும் அவரது மனைவி பரிமளா பூட்டிய வீட்டிற்குள்ளேயே இருந்ததை கண்டு காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.