/indian-express-tamil/media/media_files/SewhCjRZ4lAtigoBqkoq.jpg)
சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் உட்பட பல்வேறு இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் அவ்வப்போது வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் இன்று காலை முதல் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து வெடி விபத்து நடந்த இடத்துக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்தனர்.
இந்த விபத்தில் ஆலையில் வேலை பார்த்து வந்த 2 பேர் உயிரிழந்தனர். மாரியப்பன், முத்துமுருகன் என்ற இரண்டு தொழிலாளிகள் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிவிபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.