சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றுக்கு மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளது. அதில் தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 21 நீதிபதி பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த காலி பணியிடத்தை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் தலைமையிலான நீதிபதிகள் கோலிஜியம் 11 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தார். அதன்படி உச்ச நீதிமன்றம் இந்த பெயர் பட்டியலில் இருந்து 6 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதன்படி மாவட்ட நீதிபதிகள் பணியிடத்தில் இருந்து வரும் ஆறு பேர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து மத்திய சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருமதி.எஸ். ரமாதிலகம், ( Smt. S. Ramathilagam )திருமதி ஆர். தரணி (Smt.R. Tharani), திரு. ஆர். ராஜமாணிக்கம் (Shri.P. Rajamanickam), திருமதி டி. கிருஷ்ணவள்ளி (Smt.T.Krishnavalli), பெங்கியப்பன் (Shri.R. Pongiappan), திருமதி ஹோமலதா (Smt. R. Hemalatha) ஆகிய ஆறு பேரை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்தது.
புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு, கூடுதல் நூலக கட்டடத்தில் நடைபெற்ற விழாவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவர்கள் 6 பேரும் நீதிபதியாக பதவியேற்றதையாடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயருகிறது. இதனையடுத்து பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 11 ஆக உயருகின்றது. இன்னும் 15 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாழ்த்தி வரவேற்று பேசினார். பல்வேறு சங்கள் சார்பில் புதிய நீதிபதிகள் வாழ்த்தி பேசினார். இவர்களுக்கு புதிய நீதிபதிகள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்றம் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்றம் பதிவாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.