Advertisment

தடை செய்யப்பட்ட ஹிஸ்பு-உத்-தஹ்ரீர் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் சென்னையில் கைது

என்ஜீனியரிங் பட்டதாரி ஹமீத் ஹுசை, அவரது சகோதரர் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
Chennai
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் (HUT) என்ற சர்வதேச அமைப்பின் ஆதரவாளர்களாக கருத்தப்பட்ட 6 பேரை சென்னையில் போலீசார் நேற்று (மே 25) கைது செய்தனர். உளவுத் துறை  தகவலைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். இதில் என்ஜீனியரிங் பட்டதாரி ஹமீத் ஹுசைன், அவரது சகோதரர் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்.  அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ்  (உபா) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

கைது செய்யப்பட்ட ஹுசைன், காலிபெட் கொள்கை, ஆட்சி முறை குறித்து சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவேற்றி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதே சமயம் சில வீடியோக்களில் ஜனநாயக தேர்தல் நடைமுறைக்கு எதிராக பேசி பதிவிட்டதும் தெரிய வந்தது. 

தொடர்ந்து, தாம்பரம் மற்றும் வடசென்னை ஆகிய இடங்களில் சோதனை செய்ததில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். காமராஜபுரத்தைச் சேர்ந்த முகமது (35), காமராஜபுரம் காதர் நவாஸ் ஷெரீப் (35) என்கிற ஜாவித் (35), தொண்டியார்பேட்டை அகமது அலி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 3 பேருடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று  போலீசார் தெரிவித்தனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

chennai Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment