Advertisment

கோவை வழியாக இயக்கபடாமல் உள்ள 6 ரயில்கள்: ரயில் நிலையம் முன்பு அனைத்து கட்சியினர் மாட்டு வண்டி போராட்டம்

இந்த ஆறு ரயில்களை கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சியினர் சார்பில் மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை ரயில் நிலையத்தின் வழியாக இயக்கப்படாமல் போத்தனூர், இருகூர் ரயில் நிலையங்கள் வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் ஆறு ரயில்கள் கேரளாவிற்கு இயக்கப்படுகிறது. இந்த ஆறு ரயில்களை கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சியினர் சார்பில் மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

Advertisment

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள கீதாகபே பகுதியில் இருந்து அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் இரு மாட்டு வண்டியில் சென்று மனு அளித்தனர். இந்த போராட்டத்தில் மாட்டு வண்டியில் சென்றவாறு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பிய படி வலியுறுத்தினர்.

Coimbatore

Coimbatore

Coimbatore

இந்த மனு அளிக்கும்  போராட்டத்தில் திமுகவினர் கைகளில் வடைகளுடன் வந்து மோடி சுட்ட வடை எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மாட்டு வண்டியில் வந்து மனு அளிக்கும் போராட்டம் காரணமாக ரயில் நிலையம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment