கோவை காந்தி மாநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு அருகில் அடர்ந்த புதர் உள்ளது. நேற்று மாலை சாரைப் பாம்பு ஒன்று அடுக்கு மாடி குடியிருப்புக்குள் புகுந்தது. பாம்பை பார்த்த குடியிருப்பு வாசிகள் அருகில் இருந்த வீட்டினரை கூச்சலிட்டு எச்சரித்தனர். இந்தநிலையில் அந்த பாம்பு மீண்டும் அருகில் இருந்த புதருக்குள் சென்றது. அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“