மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கூறி கோவை வ.உ.சி பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனை அடுத்து கடந்த நவம்பர் மாதம் வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருந்து பெலிக்கான், குரங்குகள், பாம்புகள் மற்றும் முதலைகள் உள்ளிட்ட உயிரினங்களை வண்டலூர் மற்றும் வேலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.இதில் சில பாம்புகள் சிறுவாணி வனப்பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டன.
அந்த வகையில் தற்போது வ.உ.சி பூங்காவில் இருந்த 10 நாகப்பாம்புகள், 3 கண்ணாடிவிரியன், 4 சாரைப்பாம்பு ஆகியவை பெட்டிக்குள் அடைத்து வனத்துறை வாகனம் மூலம் இடமாற்றம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த பாம்புகள் பிடிக்கப்பட்டன. பாம்பை அவர்கள் பெட்டிக்குள் அடைக்கும்போது அந்தப் பாம்புகள் மிகவும் கோபத்துடன் சீறியது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“