Advertisment

பள்ளி காலை வணக்க கூட்டத்தில் இனி 'சமூக நீதி' பாடல்: அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இனி தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை வணக்க நிகழ்வில் சமூக நீதி பாடல் பாடப்படும்- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

author-image
WebDesk
New Update
School Student
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை வணக்கம் நிகழ்ச்சி முடிந்ததும் சமூக நீதிப் பாடல் ஒளிபரப்ப வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இனி வருங்காலங்களில் சமூக நீதி பாடல் பாடப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்தார்.

Advertisment

இதுகுறித்து அவர் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் "விழுதுகள்" நிகழ்வைத் தொடங்கி வைத்த மாண்புமிகு அமைச்சர் 

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் உருவாக்கப்பட்ட "சமூகநீதி" உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் "இந்த 10 பாடல்கள் தொகுப்பில் சமூகநீதியை வலியுறுத்தும் பாடலை அசெம்பிளி நேரத்தில் பாடிவிட்டு வகுப்புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார். 

"சமூகநீதிக் கொள்கையை எப்போதும் அழுத்தமாக வலியுறுத்தும் மாண்புமிகு அமைச்சர் 

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இனிவரும் காலங்களில் "சமூகநீதி" பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்" என்றார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Tamil Nadu School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment