பதவி உயர்வுகளில் சமூக நீதி: ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியீடு

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, ஓய்வு பெற்ற நீதியரசர் G.M. அக்பர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 16, 2025) அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, ஓய்வு பெற்ற நீதியரசர் G.M. அக்பர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 16, 2025) அரசாணை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN head

Tamilnadu

உச்ச நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பு ஒன்று, அரசுப் பணியாளர் பதவி உயர்வு முறையில் சமூக நீதியின் தாக்கம் குறித்து சில கேள்விகளை எழுப்பியது. இத்தீர்ப்பின் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்வதற்கும், சட்ட ரீதியான வலுவான தீர்வுகளை முன்வைப்பதற்கும் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Advertisment

சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் அரசுப் பணியாளர் தரவரிசைப் பட்டியல் மற்றும் பதவி உயர்வுகளில் சமூகநீதிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், அதற்கான சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். 
 
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, ஓய்வு பெற்ற நீதியரசர் G.M. அக்பர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 16, 2025) அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தக் குழுவின் முதன்மையான நோக்கம், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் ஏற்பட்ட மாற்றங்கள், அவை வருங்காலத்தில் சமூக நீதி அடிப்படையிலான பதவி உயர்வுகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்வதாகும். மேலும், இந்த பாதிப்புகளை சரிசெய்யவும், சமூக நீதியைப் பாதுகாக்கவும் தேவையான சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை இந்தக் குழு அரசுக்குச் சமர்ப்பிக்கும்.

நீதியரசர் G.M. அக்பர் தலைமையிலான இந்தக் குழு, சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் என அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குழு தனது ஆய்வுகளை முடித்து, சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழுவின் செயல்பாடுகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களையும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: