தென்சென்னையின் சில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஜூன் 8 ஆம் தேதி நெம்மேலி உப்புநீக்கும் ஆலை பராமரிப்புக்காக மூடப்படுவதால் குழாய் மூலம் நீர் விநியோகம் செய்யப்படாது.
13 (அடையாறு), 14 (பெருங்குடி) மற்றும் 15 (சோளிங்கநல்லூர்) ஆகிய மண்டலங்களில் உள்ள பகுதிகளில் ஜூன் 8 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படாது.
குடியிருப்பாளர்கள் முன்கூட்டியே தண்ணீரை சேமித்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஆன்லைனில் தண்ணீர் டேங்கர்களை முன்பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil