Advertisment

காங்கிரஸ் ஜெயக்குமார் மர்ம மரணம்; சபாநாயகரிடம் விசாரணையா? ஐ.ஜி கண்ணன் பதில்!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக தென்மண்டல ஐ.ஐஜி விளக்கம் அளித்தார். அப்போது, தேவைப்பட்டால்..

author-image
WebDesk
New Update
Nellai jaya.jpg

காங்கிரஸ் நிர்வாகி மர்ம மரணம் தொடர்பாக தென்மண்டல ஐஜி கண்ணன் விளக்கம் அளித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Nadu Congress | Tirunelveli | திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார்ஷ தனசிங். இவர், 2024 மே மாதம் 2-ஆம் தேதி மாயமானார்.

இந்த நிலையில், அவரது மகள் திசையன்விளை அருகே உள்ள உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisment

இதற்கிடையில், மே 4-ஆம் தேதி உடல் பகுதியளவு எரிக்கப்பட்ட நிலையில் அவரது தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜெயக்குமார் மரணம் அடைந்த பின்னர் அவரது உடல் எரியூட்டப்பட்டிருக்கலாம் என்றனர்.

அவரது உடலில் இரும்பு கம்பி, கல் உள்ளிட்டவை கட்டப்பட்டிருந்தன. இதனால் அருகில் உள்ள கடலில் அவரது உடலை வீச குற்றவாளிகள் திட்டமிட்டிருந்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையில் தென்மண்டல ஐ.ஐி கண்ணன் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பேட்டியளித்தார். அப்போது, “காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடலில் கடப்பா கல் கட்டப்பட்டுள்ளது.

மேலும், அவரின் வாயில் பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்பர் இருந்தது. இந்த வழக்கில், பணம் தொடர்பான பிரச்சினை, அரசியல் தொடர்பான பிரச்சினை என பல உள்ளது.

சபாநாயகர் பெயரும் இடம்பெற்றுள்ளது தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Nadu Congress Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment