New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/03/JxkrdoU0TMopqc0RbHpN.jpg)
தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதின்படி, மதுரை - தாம்பரம் - மதுரை வாராந்திர ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுகின்றன. இந்த மாற்றம் இன்று (பிப்ரவரி 6) முதல் மார்ச் 21 வரை செயல்படும்.
அதன்படி, 22623/22624 மதுரை - தாம்பரம் - மதுரை வாராந்திர ரயில்களில் இரண்டு ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள் மற்றும் 2 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
தற்போது, இந்த ரயில்கள் ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 5 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படுகின்றன.
இத்தகைய ஏற்பாடு பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.