தமிழ்நாடு, கேரளா-வில் 15 ரயில்களுக்கு ஆக.18 முதல் புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழ்நாடு, கேரளா ரயில்வே வழித்தடங்களில் இயக்கப்படும் 15 ரயில்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் புதிய நிறுத்தங்களுக்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா ரயில்வே வழித்தடங்களில் இயக்கப்படும் 15 ரயில்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் புதிய நிறுத்தங்களுக்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
train x2

தமிழ்நாடு, கேரளா ரயில்வே வழித்தடங்களில் இயக்கப்படும் 15 ரயில்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் புதிய நிறுத்தங்களுக்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா ரயில்வே வழித்தடங்களில் இயக்கப்படும் 15 ரயில்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் புதிய நிறுத்தங்களுக்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

Advertisment

தெற்கு ரயில்வே சார்பில் திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 18 முதல் நாகர்கோவில் - கோயம்புத்தூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிங்கநல்லூர், இருகூர், ஆரல்வாய்மொழி, மேலப்பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் 1 நிமிட நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மதுரை - புனலூர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் நாங்குநேரி, ஆரல்வாய்மொழியிலும், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஹரிப்பாட்டிலும், குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ஹரிப்பாடு, சிறையின் கீழ் நிலையத்திலும், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் குடியாத்தம், வாணியம்பாடியிலும், பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் சிங்கநல்லூரிலும் 1 நிமிட நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இதே போல, நிலம்பூர்ரோடு - கோட்டயம் - நிலம்பூர் ரோடு எக்ஸ்பிரஸ் ரயில் மேலாற்றூர், பட்டிகாடு, குலுக்கல்லூர் நிலையங்களிலும் 1 நிமிடம் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் சென்ட்ரல் - வேரவல் எக்ஸ்பிரஸ் குயிலாண்டி, பய்யனூர் நிலையத்திலும், காரைக்கால் - எர்ணாகுளம் - காரைக்கால் ரயிலுக்கு ஒற்றபாலத்திலும், நிலம்பூர் ரோடு - திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் ரயில் திருவல்லாவிலும், மங்களூரு - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் திருவல்லாவிலும், கவுரா - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கொடைக்கானல் ரோட்டிலும் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் புதிய நிறுத்தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, நாகர்கோவில் - காந்திதாம் பிஜி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 19-ம் தேதி (புறப்படும்) முதல் குயிலாண்டி, பய்யனூர், காஞ்சன் காடு நிலையத்திலும், கன்னியாகுமரி - கவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் கொடைக்கானல் ரோட்டிலும், புதுச்சேரி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 24-ம் தேதி முதல் வள்ளியூர் நிலையத்திலும் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டு உள்ளது” என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: