தீபாவளிக்கு கூடுதலாக 5 சிறப்பு ரயில்கள்... எந்தெந்த ரூட்டில் தெரியுமா?

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே 5 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்களைக் கருத்தில் கொண்டு தாம்பரம், எழும்பூர், செங்கோட்டை மற்றும் மதுரையிலிருந்து இந்தச் சேவைகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே 5 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்களைக் கருத்தில் கொண்டு தாம்பரம், எழும்பூர், செங்கோட்டை மற்றும் மதுரையிலிருந்து இந்தச் சேவைகள் இயக்கப்படுகின்றன.

author-image
WebDesk
New Update
train

தீபாவளிக்கு கூடுதலாக 5 சிறப்பு ரயில்கள்... எந்தெந்த ரூட்டில் தெரியுமா?

தீபாவளி பண்டிகையை ஒட்டித் தெற்கு ரயில்வே 5 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தற்போது, தென் மாநிலங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விழா காலங்களில் டிக்கெட் கிடைக்காத காரணத்தால் காத்திருக்கும் பயணிகளைக் கருத்தில் கொண்டு, தாம்பரம், எழும்பூர், செங்கோட்டை மற்றும் மதுரையிலிருந்து இயக்கக்கூடிய வகையில் 5 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

தாம்பரம்-செங்கோட்டை இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து நாளை (அக்.17) இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து அக்.20-ம் தேதி (தீபாவளி அன்று) இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06014) மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயிலில் 1 ஏ.சி. இருக்கை வசதி பெட்டி, 11 இருக்கை வசதி பெட்டி, 4 பொதுப் பெட்டி, 2 இரண்டாம் வகுப்பு பெட்டி என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.

இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (06161) மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும். மெமு ரயிலான இந்த ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைகக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.

மேலும், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ந்தேதி முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அன்று இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 18-ந்தேதி முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு மதுரையை சென்றடையும். மேலும், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு 21-ந்தேதி இரவு 8.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. 

Advertisment
Advertisements
indian railway Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: