கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும்; ரயில்வே

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 3 நாட்கள் கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Jan shatabdi

ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - மயிலாடுதுறை இடையேயான ஜனசதாப்தி ரயில் குறிப்பிட்ட நாட்களுக்கு திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; திருச்சி - பொன்மலை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பொறியியல் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் கோவை-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ஜனசதாப்தி ரயில் பகுதியளவு இயக்கப்பட உள்ளது.

கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயில் (வண்டி எண் 12084) மார்ச் 8, 13 மற்றும், 15 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து திருச்சி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட நாட்களில் இந்த ரயில் மயிலாடுதுறை செல்லாது.

மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை - கோவை விரைவு ரயில் (வண்டி எண் 12083) மார்ச் 8, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து புறப்பட்டு கோவை வந்தடையும். மேற்கண்ட நாட்களில் மயிலாடுதுறை- திருச்சி இடையே ரயில் இயக்கப்படாது. மேற்கண்டவாறு சேலம் கோட்டம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

க.சண்முகவடிவேல்

Trichy Southern Railway kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: