Advertisment

திருச்சி- தஞ்சை இடையே மெமு ரயில் விரைவில் துவக்கம்; தென்னக ரயில்வே

திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு மெமு ரயில்கள் விரைவில் இயக்கப்படும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Train

திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு மெமு ரயில்கள் விரைவில் இயக்கப்படும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தெற்கு ரயில்வே சார்பில் அனைத்து டெமு ரயில்களும் மெமு ரயில்களாக மாற்றப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

குறைந்தபட்சம் 160 கி.மீ. தூரம் கொண்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் ரயில்கள், 'மெமு' (Mainline Electric Multiple Unit - MEMU) ரயில்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அப்பகுதியிலுள்ள நகரங்கள் மட்டுமன்றி கிராமங்களும் பயன்படும் வகையில் இயக்கப்படுவதால், அக்குறிப்பிட்ட பகுதியின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும். இதனால், பொதுமக்களும் பெரிதும் பயனடைவர்.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் இருந்து செல்லும் அனைத்தும் டெமு ரயில்களும் மெமு ரயில்களாக மாற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து வேளாங்கன்னி- நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய ரயில் நிலையங்களுக்கு மெமு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

டெமு ரயில்கள் அனைத்தும் மெமு ரயில்களாக மாறி இருப்பதால் பயணிகள் அனைவரும் விரைவாக செல்லலாம் என்ற மகிழ்ச்சியில் அனைவரும் உள்ளனர். இந்நிலையில் அவர்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு மெமு ரயில்கள் விரைவில் இயக்கப்படும்.

திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு மெமு ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் மெமு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் -சென்னை இடையே இரட்டை ரயில் பாதை கொண்டு வந்தால் மட்டுமே கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.

இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு வெகு விரைவில் சென்று வர முடியும் என ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், மதுரையை அடிப்படையாக கொண்டு 'மெமு' ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, போடி, கொல்லம், திருச்சி, ராமேஸ்வரம், பொள்ளாச்சி வரை இயக்கப்பட்டால், இந்த நகரங்களுக்கு இடையிலான கிராமங்கள் பெருமளவில் பயனடைவதுடன், பேருந்து போக்குவரத்தைவிட மிகக் குறைந்த செலவில் தங்களது பயணத்தை பொதுமக்கள் பெற முடியும் இரவும் ரயில் பயணங்களில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment