தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு ஹேப்பி நியூஸ்; கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவர்களுக்கு வசதியாக அதிகாலையில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவர்களுக்கு வசதியாக அதிகாலையில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai beach tambaram train service cancelled tamil news

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Advertisment

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், வரும் திங்கட்கிழமை மீண்டும் சென்னை திரும்ப வாய்ப்புள்ளதால் பயணிகளுக்கு வசதியாக காலை 4 மணி முதல் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் வெவ்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்ல வசதியாக வருகிற நவம்பர் 4 ஆம் தேதி அதிகாலை முதல் புறநகர் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை நவம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு முதல் ரயிலும் 4:30, 5:00, 5:45, 6:20 மணிக்கு அடுத்தடுத்த ரயில்களும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்த சிறப்பு ரயில்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதல் நேரம் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Train

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: