/indian-express-tamil/media/media_files/2025/06/06/Isw73G17qijZsrPJeNad.jpg)
சோழன், மலைக்கோட்டை, பாண்டியன் உள்பட 5 விரைவு ரயில்கள் செப்.10 முதல் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், 5 விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர் - திருச்சி சோழன் (22675)
எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் (12654/ 12653)
எழும்பூர் - மதுரை பாண்டியன் (12638)
எழும்பூர் - ராமேஸ்வரம் சேது(22661/ 22662)
எழும்பூர் - ராமேஸ்வரம் போட் மெயில் (16751 / 16752)
ஆகிய விரைவு ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.
அதேபோல, எழும்பூர் - மும்பை விரைவு ரயில், கடற்கரையில் இருந்தும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வரும் 10- ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இருக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.