/indian-express-tamil/media/media_files/2025/05/27/Lp1SMvHffde9FLSwl8i0.jpg)
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று முன்கூட்டியே தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், வட தமிழகத்தில் இயல்பை விட அதிக மழையும், மத்திய மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று முன்கூட்டியே தொடங்கிவிட்டது. இதனால், தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் இயல்பைவிட கூடுதலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழையில் இயல்பை விட அதிக அளவு மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது. இது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களுக்கு பொருந்தும்.
மத்திய மாவட்டங்களில் இயல்பை ஒட்டிய மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த கணிப்பு தமிழக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் முக்கியமான தகவலாகும். அதிக மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.