/indian-express-tamil/media/media_files/2025/05/24/To6r4nUHDnLRPWX6p93K.jpg)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமான தேதிக்கு முன்னதாகவே தொடங்கிய நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமான தேதியான ஜூன் 1 ஆம் தேதிக்கு 8 நாட்களுக்கு முன்னதாகவே, மே 24 ஆம் தேதியே தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன்மூலம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் முதல் வாரத்தில் பருவமழை பரவக்கூடும். இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 80% தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமான தேதிக்கு முன்னதாகவே தொடங்கிய நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று (மே 24, 2025) இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், கர்நாடகாவின் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. முன்னதாக, கேரளாவில் மே 24 ஆம் தேதிக்கு 8 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதன் காரணமாக, கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து, கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குவார்ட்டர் மூடல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது.
அதிக கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். மரம் வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. வால்பாறை, டாப்சிலிப் பகுதியில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியிலும் மண்டல வாரியாக உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.