Advertisment

தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களும் எந்த தொழில்களும் நடைபெறுவதில்லை; எஸ்.பி.மணி

கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.,வில் இணைந்த இளைஞர்கள்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கோரிக்கை

author-image
WebDesk
New Update
kovai admk youth event

கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.,வில் இணைந்த இளைஞர்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை அ.தி.மு.க தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அ.தி.மு.க.,வில் புதியதாக இளைஞர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில், அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்சுணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க கட்சியின் சால்வை அணிவித்து ரோஜா மலர் கொடுத்து வரவேற்று வாழ்த்தினார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய எஸ்.பி.வேலுமணி, தனித்தலைமையாக எடப்பாடியார் பொதுச் செயலாளராக வந்ததிலிருந்து அதிகப்படியான இளைஞர்களும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். தற்பொழுது நீங்கள் எல்லாம் சேர்ந்து இருக்கக்கூடிய இந்த அ.தி.மு.க கட்சி சிறப்பான கட்சி. இது ஒரு குடும்பம் போன்றது. இந்த கட்சியில் இணைந்தால் எதிர்காலம் இருக்கும்.

இந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் போல் இருப்பார்கள். தி.மு.க.,வில் அது போன்று இருக்காது. எந்த பிரச்சனையானாலும் நாங்கள் உடன் இருப்போம். வேலை வாய்ப்பு உட்பட சுக துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவோம். நான் அமைச்சராக இருந்த பொழுது கோவை மாவட்டத்தில் மட்டும் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுத்தேன் என்று கூறினார்.

இந்த கட்சியில் 24 மணி நேரம் பணியாற்ற வேண்டாம் எனவும் கிடைக்கின்ற நேரத்தில் பணியாற்றலாம் எனவும் தேர்தல் காலங்களில் மட்டும் முழுமையாக பணியாற்ற வேண்டும் என இளைஞர்கள் மத்தியில் தெரிவித்தார். மேலும் பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். உங்களை நாங்கள் எங்கள் குழந்தைகள் போலும் தம்பிகள் போலும் பார்ப்போம் எனவும் வேலுமணி கூறினார்.

நீட் தேர்வு குறித்து தி.மு.க ஏமாற்றி வருவதாகவும் ஆனால் எடப்பாடியார் 7.5% இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார் எனவும் வேலுமணி குறிப்பிட்டார். மேலும் கொரோனா காலத்தில் தேர்வின் பொழுது அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்தாக தெரிவித்த வேலுமணி, தற்பொழுது 52 சதவிகிதம் பேர் உயர்கல்வி படிக்கிறார்கள் என்றால் அதற்கு அம்மாவின் (ஜெயலலிதா) அரசுதான் காரணம் என தெரிவித்தார்.

தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களும் எந்த தொழில்களும் நடைபெறுவதில்லை, அனைத்திற்கும் விலை உயர்வு தான் என கூறிய வேலுமணி, ஒட்டுமொத்த மக்களும் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புவதாகவும் அதற்காக நீங்கள் அனைவரும் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aiadmk Sp Velumani kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment