Advertisment

’தெற்கிலிருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள்’: ஆடியோ தொடரில் பேசுகிறார்  ஸ்டாலின்

’இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற தலைப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின், புதிதாக குரல் பதிவுத் தொடரில் பேச உள்ளார்.

author-image
WebDesk
New Update
ஆடியோ தொடரில் பேசுகிறார் ஸ்டாலின்

ஆடியோ தொடரில் பேசுகிறார் ஸ்டாலின்

’இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற தலைப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின், புதிதாக குரல் பதிவுத் தொடரில் பேச உள்ளார்.

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக  உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் மக்களின் கேள்விகளுக்கு வீடியோ வாயிலாக பதிலளித்துள்ளார்.  இந்நிலையில் ‘ இந்தியாவுக்கு பேசுகிறேன்’ என்ற தலைப்பில் குரல் பதிவுத் தொடரில் பேச உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் .

“ திராவிட முன்னேற்றக் கழகம் 75வது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் 3 வது பெரிய கட்சி. தற்போது இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். 2024-ல் முடிய போகிற பாஜக ஆட்சியில், இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைத்துள்ளார்கள்? நாம் கட்டமைக்க விரும்பும் சமத்துவ, சகோதரத்துவ இந்தியா குறித்தும் ஆடியோ தொடராக பேசவுள்ளேன். தெற்கிலிருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment