/indian-express-tamil/media/media_files/2024/11/14/zD8WS6fWFbmmlwSnd53d.jpg)
பௌர்ணமியை ஒட்டி சிறப்பு பேருந்து
திருவண்ணாமலை பொர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட் சார்பாக வெள்ளிக்கிழமை (நவ.15) அன்று சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பேருந்துகளும் புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, திருக்கோவிலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திட்டக்குடி, வேலூர், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 150 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் நவம்பர் 15 மற்றும் நவம்பர் 16 ஆம் தேதி ஆகிய வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள்.
எனவே அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக நவம்பர் 15 ஆம் தேதி 335 பேருந்துகள், நவம்பர் 16 ஆம் தேதி 165 பேருந்துகள் என மொத்தம் 500 சிறப்பு பேருத்தகளை மேற்கண்ட வழித்தடங்களின் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருத்து திருவண்ணாமலைக்கு ஆற்காடு, ஆரணி வழியாகவும் காஞ்சிபுரம், வந்தவாசி வழியாகவும் நவம்பர் 15 மற்றும் நவம்பர் 16 ஆம் தேதி விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 40 சிறப்பு பேருத்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் https://www.tnstc.in/OTRSOnline/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் வருகை குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யவும் பேருத்து இயக்கத்தினை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.