/indian-express-tamil/media/media_files/2025/04/17/YRHc4y79SBKdjeyCB0Mn.jpg)
ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடத்தல் சம்பவங்களை கண்காணிப்பது மற்றும் கடலில் தவறி விழும் மீனவர்களை மீட்பது குறித்து இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு ஐ.எம்.எஸ் பருந்து ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு பயிற்சி நடைபெற்றது
வருடத்திற்கு மூன்று முறை இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு பயிற்சியானது நடைபெறுவது வழக்கம் அவ்வாறு இன்று ராமேஸ்வரம் தீவுப்பகுதியை சுற்றி ஐ.எம்.எஸ் பருந்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் வளம் வந்தன. அதன் பின்பு பாம்பன் அருகாமையில் கடலில் தவறி விழும் மீனவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியில் கடலில் தவறி விழும் மீனவர்களை ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவாறு பைலட்டுகள் எவ்வாறு மீட்பது மற்றும் தமிழக கடல் வழியாக போதை பொருட்கள் இலங்கைப் பகுதிக்கு கடத்தப்படும் பொழுது அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இன்று துவங்கிய பயிற்சியானது தொடர்ந்து பத்து நாட்கள் ராமேஸ்வரம் தீவுப்பகுதியை சுற்றி கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என இந்திய கடற்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம்: கடத்தல் சம்பவங்களை கண்காணிக்க, கடற்படை அதிகாரிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு பயிற்சி#rameshwaram#specialtrainingpic.twitter.com/0AjQ649hut
— Indian Express Tamil (@IeTamil) April 17, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.