/indian-express-tamil/media/media_files/2025/10/13/dpi-tet-exam-2-2025-10-13-20-07-42.jpg)
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2026-ம் ஆண்டு முதல் 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பாணையை திங்கள்கிழமை வெளியிட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், டெட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு முறையான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், அடுத்த 2026-ம் ஆண்டு முதல் 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2026-ம் ஆண்டு ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.