New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/04/trains-1.jpg)
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
திருநெல்வேலி-தாம்பரம், தாம்பரம்-திருநெல்வேலிக்கு தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன.
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
பயணிகளின் கூட்டத்தை கையாளும் வகையில் தாம்பரம்-திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதன்படி வண்டி எண் 06051 தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.
அதேபோல் வண்டி எண் 06052 திருநெல்வேலியில் இருந்து ஆக.12ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்தத் தகவல்கள் தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.