/tamil-ie/media/media_files/uploads/2017/06/Anbumani-Mp-Pmk.jpg)
எனக்கு தமிழ்நாட்டில் இரண்டு தலைவர்களை மிகவும் பிடிக்கும்; ஒன்று பெரியார் மற்றொன்று பெருந்தலைவர் காமராஜர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நாடார் மஹாஜன சங்க 72 ஆவது மாநாட்டின் 2ம் நாள் விழாவில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, “எனக்கு தமிழ்நாட்டில் இரண்டு தலைவர்களை மிகவும் பிடிக்கும்; ஒன்று பெரியார் மற்றொன்று பெருந்தலைவர் காமராஜர்.
தமிழ்நாட்டில் 28 ஆயிரம் பள்ளிகளை காமராஜர் உருவாக்கினார். உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்த நிலைமையை தமிழ்நாட்டில் மாற்றி அமைத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் மற்றும் விவசாய புரட்சியை ஏற்படுத்தினார்; நீர் மேலாண்மையில் புரட்சி செய்தார். 13 நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்கினார்.
அது இல்லையென்றால் தமிழ்நாடு என்று வறண்ட மாநிலமாக மாறி இருக்கும். இப்போது அரசு பள்ளிகளை மூடுகின்றனர்; அக்காலத்தில் ஒவ்வொரு பள்ளிகளாக சிரத்தை எடுத்து சிறந்தவர் காமராஜர்.
12 அணைகளைக் கட்டி நீர் மேலாண்மை செய்தார். நாம் ஆளுகின்ற காலம் வந்துவிட்டது; நமக்குத் தேவை எம்எல்ஏ எம்பிகளோ கிடையாது. முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஆட்சி அதிகாரம்.
காமராஜருக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் எந்த நலத்திட்டத்தையும் செய்யவில்லை; அவர்கள் ஆண்டது போதும்.
நாம் ஒரு ஐந்து ஆண்டு காலம் ஆண்டு பார்ப்போம். சரி இல்லை என்றால் ஒதுங்கிக் கொள்வோம்" என்றார்.
தொடர்ந்து, "சாதி வாரி கணக்கெடுப்பு என்பது எண்ணிக்கை கிடையாது; அது ஒவ்வொரு சமூக மக்களின் எண்ணம் சார்ந்தது.
ராமதாஸ் மருத்துவர் ஆனதற்கு பெருந்தலைவர் காமராஜர் தான் காரணம்; அதை என்னிடமே அவர் பலமுறை கூறியுள்ளார்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.