/indian-express-tamil/media/media_files/n5NBKbAGFx4c5Ok6GxsW.jpg)
சென்னை அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வந்த மகாவிஷ்ணு என்பவர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மாற்றுத் திறனாளிகள் பற்றி இழிவாகவும், பிற்போக்குத்தனமாகவும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில், மகாவிஷ்ணு மீது திருவெற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாய்க்கரங்கள் அமைப்பு சார்பில் மாநில மாற்றுத் திறனாளிகள் இயக்குநரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கத்தின் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் சரவணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் மாகவிஷ்ணு வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இவ்வழக்கு குறித்து அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.