/tamil-ie/media/media_files/uploads/2023/05/Rajini.png)
இலங்கை துணை தூதர் வெங்கடேஷ்வரன் ரஜினிகாந்திடம், நாட்டின் சுற்றுலாவுக்கு உதவி கோருமாறு கேட்டுள்ளார்.
தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் வெங்கடேஷ்வரன் நடிகர் ரஜினிகாந்த்-ஐ சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இலங்கை துணை தூதர் ரஜினிகாந்திடம், நாட்டின் சுற்றுலாவுக்கு உதவி கோருமாறு கேட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
தற்போது அந்நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து படிப்படியாக முன்னேறிவருகிறது. இந்த நிலையில், இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவ முன்வருமாறு ரஜினிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து லால் சலாம் என்ற படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து ஜெய் பீம் இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்திலும் 170ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.
இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையெல்லாம் சுற்றிக்காட்ட இராமயணா டிரையல் என்கிற புதிய திட்டத்தை சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.