12 தமிழக மீனவர்களுக்கு 1.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மன்னர் வளைகுடா அருகே எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி, தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

மன்னர் வளைகுடா அருகே எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி, தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
TN Fishermen arrested

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளான நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி, மீனவர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தாலும், இதற்கான தீர்வு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், மீனவர்கள் வைத்திருக்கும் வலைகளை சேதப்படுத்துவது, படகுகளை கைப்பற்றுவது என பல நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் மீண்டும் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகி வருகிறது. இந்தியா மற்றும் தமிழகத்தில் எவ்வளவு தான ஆட்சி மாற்றம் வந்தாலும் இந்த நிலை இன்னும் மாறாதது மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மன்னர் வளைகுடா அருகே எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி, தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கும் ரூ1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால், 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

தினசரி கூலிக்காக மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: