/indian-express-tamil/media/media_files/2025/07/03/fishermen-ramnad-2025-07-03-15-24-21.jpg)
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேருக்கு ஜூலை 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற எட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்கள் சர்வதேச கடல் எல்லைப் பகுதியைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. தற்போது, இந்த நீதிமன்றக் காவல் வரும் ஜூலை 17, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கைகளாக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசும், இந்திய அரசும் மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.